தூத்துக்குடி, ஜன. 23: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்க தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துவரும் கிராமசபை கூட்டங்களில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. பங்கேற்று வருகிறார். இன்று (23ம்தேதி) பிற்பகல் 2 மணிக்கு தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் நடத்தும் கருத்தரங்கில் அவர் பங்கேற்றுப் பேசுகிறார். மாலை கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம் சோழபுரம், மஞ்சநாயக்கன்பட்டி, மேலஈரால், சண்முகபுரம் ஊராட்சிகளில் நடக்கும் கிராமசபை கூட்டங்களிலும், நாளை (24ம் தேதி) காலை 10 மணிக்கு கோவில்பட்டி மேற்கு ஒன்றியம், இலுப்பையூரணி தமிழரசன் திருமணமண்டபத்தில் நடைபெறும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்திலும், நண்பகல் 12 மணிக்கு பாண்டவர்மங்கலம் காமராஜர் அரங்கில் நடக்கும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்திலும், மாலை புதூர் கிழக்கு ஒன்றியம் கவுண்டன்பட்டி, சங்கரலிங்கபுரம், சின்னவநாயக்கன்பட்டி, மேலக்கல்லூரணி ஊராட்சிகளில் நடக்கும் கிராமசபை கூட்டங்களிலும் பங்கேற்கிறார்.
28ம் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி கலைஞர் அரங்கில் 4, 6, 7, 8, 9, 10, 11 வார்டுகளுக்கான ்பூத் கமிட்டி கூட்டத்திலும், நண்பகல் 12 மணிக்கு சந்திரா மஹாலில் 3, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42 ஆகிய வார்டுகளுக்கான பூத் கமிட்டி கூட்டத்திலும் பங்கேற்றுப் பேசுகிறார். எனவே, மேற்கண்ட நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு அணியினர், அந்தந்த பூத் கமிட்டியினர் தவறாது பங்கேற்க வேண்டுகிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.